துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

 

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பெயர் அடிபட்டது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்களும் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் அதிமுகவின் இமேஜை டேமேஜ் செய்த இந்த வழக்கு காரணமாக பொள்ளாச்சி ஜெயராமனை திருப்பூர் மாவட்டத்துக்கு மாற்றினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதனால் அவருக்கு திருப்பூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி ஜெயராமன், தனது சொந்த தொகுதியான பொள்ளாச்சியிலேயே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் தற்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நெஞ்சுவலி காரணமாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.