கொரோனா ஒழிய கோவிலில் சிறப்பு பூஜை செய்த பொள்ளாச்சி தி.மு.க!

 

கொரோனா ஒழிய கோவிலில் சிறப்பு பூஜை செய்த பொள்ளாச்சி தி.மு.க!

கொரோனா வைரஸ் ஒழிய வேண்டும் என்று பொள்ளாச்சி தி.மு.க சார்பில் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு இருப்பது சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஒழிய கோவிலில் சிறப்பு பூஜை செய்த பொள்ளாச்சி தி.மு.க!


தி.மு.க இந்து மதத்துக்கு விரோதமான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்க பா.ஜ.க சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தி.மு.க சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார் படத்தை வெளியிட்டார். இதற்கு கட்சிக்குள் இருந்தே விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தி.மு.க இந்து விரோத கட்சியா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா ஒழிய கோவிலில் சிறப்பு பூஜை செய்த பொள்ளாச்சி தி.மு.க!


அண்ணா காலத்திலேயே ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். கடவுள் நம்பிக்கை அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதற்குள்ளாக செல்ல விரும்பவில்லை என்று கட்சி மேலிடம் தொடர்ந்து கூறி வரும் நிலையில், களத்தில் நாங்கள்தான் மக்களை சந்திக்க வேண்டும், எனவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தி.மு.க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

கொரோனா ஒழிய கோவிலில் சிறப்பு பூஜை செய்த பொள்ளாச்சி தி.மு.க!


இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் கொரோனா ஒழிய வேண்டும் என்று தி.மு.க நிர்வாகிகள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி மக்களுக்கு அன்னதானமும் வழங்கியுள்ளனர். பொள்ளாச்சியில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலில் தி.மு.க நிர்வாகிகள் பூஜை நடத்தியதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பக்தி பழகமாக தி.மு.க நிர்வாகிகள் நிற்பதைப் பார்த்து எலெக்‌ஷனுக்காக இப்படி மாறிவிட்டார்களே என்று பக்தர்கள் கமெண்ட் செய்து சென்றனர். சமூக ஊடகங்களிலும் பலரும் தி.மு.க-வின் திடீர் பக்தியை விமர்சித்து வருகின்றனர்.