பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது – ரூ.1.47 லட்சம் பறிமுதல்

 

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது – ரூ.1.47 லட்சம் பறிமுதல்

கோவை

பொள்ளச்சி அருகே தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோழனூர் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் சிலர் பணம் கட்டி சூதாட்டம் நடத்துவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது – ரூ.1.47 லட்சம் பறிமுதல்

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி தாலுகா காவல்நிலையய போலீசார், அங்கு காளிமுத்து என்பவரது தோட்டத்தில் வெளியூரை சேர்ந்த சில நபர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை மடக்கிப்பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பகுதியில் வேறு எங்கும் சூதாட்டம் நடைபெறுகிறதா என போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.