திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு… மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…

 

திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு… மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…

திருச்சி

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

திருச்சி மரக்கடை பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று காலை மர்மநபர்கள் சிலர் சிலையின் கை பகுதியை உடைத்து சேதப்படுத்தி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவினர், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அங்கு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு… மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…

பின்னர், இதுகுறித்து, அதிமுக சார்பில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை சேதப்படுத்திய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், நாட்டிற்கு உழைத்த தலைவர்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற, இழி செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் செய்வோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்து உள்ளார்.