“இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறித்தனமாக உள்ளது” : அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்

 

“இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறித்தனமாக உள்ளது” : அதிமுக முன்னாள் அமைச்சர்  பொன்னையன்

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அமைச்சர் அமித் ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறித்தனமாக உள்ளது” : அதிமுக முன்னாள் அமைச்சர்  பொன்னையன்

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். முதல்வரின் தாயார் மறைவுக்கு பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தவுசாயம்மாள் மறைவுக்கு இரங்கல் கடிதம் அனுப்பினார். ஆனால் அவரின் இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

“இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறித்தனமாக உள்ளது” : அதிமுக முன்னாள் அமைச்சர்  பொன்னையன்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், “அமித் ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை. இருப்பினும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால், இந்தி திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

“இந்தி திணிப்பில் மத்திய அரசு வெறித்தனமாக உள்ளது” : அதிமுக முன்னாள் அமைச்சர்  பொன்னையன்

முன்னதாக இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “எனக்கு இந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.