வாரிசு அரசியலை ஏற்க முடியாது - துரை வைகோ அதிரடி

 
d

திமுகவில் தனக்குப் பிறகு ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வந்தார் கருணாநிதி.   இந்த வாரிசு அரசியல் பிடிக்காமல் கட்சியில் இருந்து வெளியேறினார் துரை வைகோ.  திமுகவிலிருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கிய வைகோ தனது மகன் துரை வைகோவை கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக கொண்டு வந்த போது,  இங்கேயும் வாரிசு அரசியலா என்று எதிர்ப்பு தெரிவித்த மூத்த நிர்வாகிகள் சிலர் மதிமுகவை விட்டு வெளியேறினர்.

 இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை எடுத்து திமுகவின் வாரிசு அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுருந்திருக்கும் நிலையில் வாரிசு அரசியலை ஏற்க முடியாது என்கிறார். 

d

 துரை வைகோ மதிமுக அணியின் மாநில மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில்  தாயகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மதிமுக திராவிட முன்னேற்றக்  கழகச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று பேசினார். 

  அப்போது, உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்க செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  அதனால் அவர் அமைச்சர் ஆவதற்கு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரவேற்கக் கூடியது.   மற்றபடி வாரிசு அரசியல் என்பதை நானும் ஏற்கவில்லை.  மக்கள் விருப்பப்பட்டால் தான் ஒருவர் அரசியலில் வளர முடியும் என்று கூறியிருக்கிறார். 

 திமுகவுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்த கருத்துடைய காட்சிகளும் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.