இதனால்தான் இபிஎஸ் உதவியாளர் மணியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது

 
எ

 சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி.  இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  

 எடப்பாடி பழனிசாமி உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல நபர்களிடம் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.   இதன்பின்னர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 17 லட்சத்தை புரோக்கர் செல்வகுமார் மூலமாக பெற்றிருக்கிறார் .  ஆனால் தமிழ்ச்செல்வனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

எப்

 இதையடுத்து தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்திருந்தார்.   இந்த புகாரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 இந்த முன் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு வந்தது.   காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ்,  பணமோசடி செய்த மனு மீது மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்பதால் இவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியின்  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.