அவசர ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி! 

 

அவசர ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்டார்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி! 

அவசர ஆம்புலன்ஸ் சேவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இருக்கிறார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், முதலமைச்சரின் செயலர்கள் விஜயகுமார், சாய் குமார் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

நேற்று மாலை லண்டன் சென்ற எடப்பாடி பழனிசாமியை அங்கிருக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து இன்று லண்டனில் உள்ள சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் லண்டனில் செயல்பட்டு வரும் அவசர ஆம்புலன்ஸ் சேவையைப் பார்வையிட்டுள்ளனர்.