முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை!

 

முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை!

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூரை சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் (45). இவர் வளரும் தமிழகம் கட்சியின் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு ரஜினி பாண்டியன், தனது இருசக்கர வாகனத்தில் எடையூர் மூல மதகு பகுதி வழியாக சென்று கொண்டிருந்துள்ளார்.

முத்துப்பேட்டை அருகே அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை!

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள், ரஜினி பாண்டியனை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு, தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஜினிபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட எஸ்.பி.சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.