ஈரோட்டில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

 

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

முன்னாள் முதலமைச்சர்அண்ணாவின் 112-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கும்,படங்களுக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

ஈரோட்டிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்- இல் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.சி. ராமசாமி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் துணை மேயர் கே. சி பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ் கேசவமூர்த்தி ஜெயராஜ் கோவிந்தராஜ் தங்கமுத்து ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார் மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், பெரியார் நகர் அவைத்தலைவர் மீன் ராஜா அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதையன், பொன் சேர்மன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ், பொருளாளர் பி கே பழனிச்சாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன் செல்வராஜ் முன்னாள் கவுன்சிலர் எம் சி மணி, உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில நெசவாளர் அணி செயலாளர் தரணி சண்முகம் , இளைஞர் பாசறை செயலாளர் , மன்ற செயலாளர் சன்ரைஸ் லோகநாதன், அம்மா பேரவை இணைச் செயலாளர் நடராஜ் , எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது ராஜா ,பாசறை துணைச் செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், மகளிர் அணி தலைவி வண்ணமலர், ஒன்றிய செயலாளர் பூ பாலமுருகன், பகுதி செயலாளர்கள் சார் ஜஹான் நேரு, அய்யாசாமி சக்திவேல் மீரான் பாபு ஜான் மகளிர் அணி நிர்வாகிகள் யமுனா பரமேஸ்வரி இலாகிரா குப்பாயி அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரியார் நகர் பகுதி சார்பில் 46 வட்ட செயலாளர் குட்டி ராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இருக்கும் வழங்கப்பட்டன . பாசறை செயலாளர் பெரியார் நகர் கண்ணன் , அம்மா பேரவை இணைச் செயலாளர் நடராஜன் , வர்த்தகர் அணி தலைவர் சக்திவேல் குட்டி ராஜா உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மாவட்ட செயலாளர் மயில்துரையன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் குமார் பாண்டியன் சுப்பிரமணியம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் புலிகள் கட்சி சார்பில் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் அண்ணா சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுச் செயலாளர்கள் இளவேனில் பேரறிவாளன் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன் வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.