ஜனவரி 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

 

ஜனவரி 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

நாடு முழுவதும் வரும் 30ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் வரும் 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி 16ம் தேதி தொடங்கவிருப்பதால் போலியோ முகாம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை சொட்டு மருந்து முகாம் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா வைரஸ் செலுத்துவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

இந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கி வைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.