4 பெண்களை திருமணம் செய்த போலீஸ்காரின் மகன் கைது!

 

4 பெண்களை திருமணம் செய்த போலீஸ்காரின் மகன் கைது!

திருச்சி் ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மகாலிங்கத்தின் மகன் கார்த்தி (26) தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதியை(21) கைப்பேசி மூலம் நட்பு ஏற்பட்டு காதலித்து கடந்தாண்டு சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு செல்போனை பார்த்த சுமதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால் கார்த்திக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

4 பெண்களை திருமணம் செய்த போலீஸ்காரின் மகன் கைது!

இதுகுறித்து கார்த்திக்கிடம் சுமதி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கார்த்திக்கை லால்குடி மகளிர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.