“பங்காளியோடு வந்த பொண்ணை பங்கு போட்டுட்டீங்களே..” -ஒரு போலீஸ் செஞ்ச சதி .

 

“பங்காளியோடு வந்த பொண்ணை பங்கு போட்டுட்டீங்களே..” -ஒரு போலீஸ் செஞ்ச சதி .


ஒரு கெஸ்ட் ஹௌஸிற்கு உறவினரோடு தங்க வந்த ஒரு பெண்ணை, ஒரு கான்ஸ்டபிளும் அந்த கெஸ்ட் ஹௌஸ் உரிமையாளரும் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

“பங்காளியோடு வந்த பொண்ணை பங்கு போட்டுட்டீங்களே..” -ஒரு போலீஸ் செஞ்ச சதி .


உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியின் நவுச்சண்டி பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் கடந்த சனிக்கிழமை ஒரு இளம் பெண் தன்னுடைய உறவினர் ஒருவரோடு வந்து தங்கினார் .அப்போது அந்த பெண் அந்த கெஸ்ட் ஹௌஸ் உரிமையாளரின் மகனிடம் தான் சொந்த வேலையாக இந்த ஊருக்கு வந்ததாகவும் ,தன்னோடு இருப்பவர் தன்னுடைய உறவினர் என்றும் கூறினார் .
ஆனால் அதை நம்பாத அந்த கெஸ்ட் ஹௌஸ் உரிமையாளரின் மகன் தனக்கு தெரிந்த ஒரு போலீஸ் காரரிடம் ரெய்டுக்கு வருவது போல வருமாறு கூறினார் .பிறகு அந்த போலீஸ் நண்பர் அந்த கெஸ்ட் ஹவுசில் இருக்கும் பெண்னின் ரூமிற்குள் நுழைந்து ரெய்டு நடத்துவதாக கூறி மிரட்டியுள்ளார் .இதனால் அந்த பெண்ணும் அவரின் உறவினரும் பயந்தார்கள் .
அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த போலீசும், அந்த கெஸ்ட் ஹௌஸ் உரிமையாளரின் மகனும் அந்த பெண்ணை மிரட்டி அங்கே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் .பின்னர் இருவரும் அங்கிருந்த அவரின் உறவினரை மிரட்டி பணத்தையும் பறித்து சென்றனர் . .இதனால் மிகவும் மன சோர்வடைந்த அந்த பெண் அங்குள்ள ஹப்பூர் போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் அந்த கான்ஸ்டபிளை விசாரிப்பதாக கூறி அவரை அனுப்பியுள்ளார்கள் .ஆனால் இதுவரை அந்த போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது .போலீஸ் உயரதிகாரிகள் இது பற்றி கூறுகையில் இது வரை இந்த பலாத்காரம் பற்றி முறையான புகார் வரவில்லை என்றும் அப்படி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் .

“பங்காளியோடு வந்த பொண்ணை பங்கு போட்டுட்டீங்களே..” -ஒரு போலீஸ் செஞ்ச சதி .