காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அரவிந்தன் அஞ்சலி
Oct 21, 2020, 15:43 IST1603275216000
காவலர் வீரவணக்க நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு எஸ்.பி. அரவிந்தன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியின் போது கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவிய ஆயுதப்படை காவலர்களுக்கு கேடயம் வழங்கி எஸ்.பி. அரவிந்தன் பாராட்டினார்.