காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி. அபிநவ் அஞ்சலி
Oct 21, 2020, 17:11 IST1603280474000
காவலர் வீரவணக்க நாளையொட்டி, இன்று கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் கடலூர் மாவட்ட எஸ்.பி., அபிநவ் மலர்வளையம் வைத்து, நாட்டில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி சுரேந்திரகுமார்,
ஏடிஎஸ்பி பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர், ஆயுதப்படை காவலர்கள் சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.