உன்னால என்ன ஒன்னும் புடுங்க முடியாதுடா! நீதிபதியை அவமானப்படுத்திய சாத்தான்குளம் காவலர்

 

உன்னால என்ன ஒன்னும் புடுங்க முடியாதுடா! நீதிபதியை அவமானப்படுத்திய சாத்தான்குளம் காவலர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி முதலில் பென்னிக்ஸ் இறந்தார். மறுநாள் ஜெயராஜ் உயிரிழந்தார். அடுத்தடுத்து தந்தை, மகன் இறந்த சம்பவத்துக்கு சாத்தான்குளம் போலீசார்தான் காரணம் எனக்கூறி வியாபாரிகள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்தனர். காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை கொரோனா காலக்கட்டத்திலும் போராட்டத்தில் குதித்தனர்.

உன்னால என்ன ஒன்னும் புடுங்க முடியாதுடா! நீதிபதியை அவமானப்படுத்திய சாத்தான்குளம் காவலர்
இதற்கிடையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்கக்கோரி தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உயர்நீதிமன்றம் பதிலளித்தது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர், மாஜிஸ்திரேட்டிடம் “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என மரியாதை குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் மாஜிஸ்திரேட் கேட்ட தரவுகளையும் அந்த காவலர் தர மறுத்துள்ளார். இந்நிலையில் தந்தை, மகன் சித்ரவதை மரண விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நாளை காலை ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

கான்ஸ்டபிளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் மு.க. ஸ்டாலின், “#JayarajandFenix கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.