ரவுடி துரைமுத்துவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்த காவலர் சஸ்பெண்ட்!

 

ரவுடி துரைமுத்துவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்த காவலர் சஸ்பெண்ட்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே 4 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை பிடிக்க, தூத்துக்குடி போலீசார் சென்றனர். அப்போது காவலர்களிடம் இருந்து தப்பிக்க ரவுடி துரைமுத்து நாட்டு வெடிகுண்டை வீசினார். அந்த வெடிகுண்டு தலைமைக் காவலர் சுப்பிரமணியத்தின் தலையில் விழுந்து வெடித்ததால், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அதே போல வெடிகுண்டு வீசிய ரவுடியும் அங்கேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரவுடி துரைமுத்துவின் உடலையும் காவலர் சுப்பிரமணியத்தின் உடலையும் மீட்டு வந்த போலீசார் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர்.

ரவுடி துரைமுத்துவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்த காவலர் சஸ்பெண்ட்!

அதன் பின்னர் குண்டுகள் முழுங்க காவலரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், ரவுடியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், ரவுடி துரைமுத்துவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். துரைமுத்துவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் நெல்லை ஆயுதப்படை காவலர் கடலைமுத்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது நெல்லை காவல் ஆணையர் தீபக்கின் கவனத்துக்கு எட்டியதால், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.