கந்தசஷ்டி கவசம் பாடியவர்களுக்கு போலீஸ் சம்மன்!

 

கந்தசஷ்டி கவசம் பாடியவர்களுக்கு போலீஸ் சம்மன்!

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட நிலையில் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கந்தசஷ்டி கவசம் பாடியவர்களுக்கு போலீஸ் சம்மன்!

இதை தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததின் எதிர்வினையாக தமிழகம் முழுவதிலும் பாஜகவினர் கடந்த 9 ஆம் தேதியன்று வீடுகளில் வேல்பூஜை நடத்தி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

கந்தசஷ்டி கவசம் பாடியவர்களுக்கு போலீஸ் சம்மன்!

இந்நிலையில் மதுரையில் கோவில் முன் கந்தசஷ்டி கவசம் பாடிய பாஜக, இந்து முன்னணி அமைப்பினருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். கருப்பர் கூட்டத்திற்கு எதிராக கந்த சஷ்டி கவசம் பாடி வேல் பூஜை நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி தெற்குவாசல் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.