வேலூரில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

 

வேலூரில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

வேலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர் இம்ரான் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் அண்மை காலமாக போலீசார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பணி அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக காவலர்கள் பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வேலூரில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

இந்நிலையில் வேலூர் ஆயுதப்படையில் பணியாற்றும் இம்ரான் என்ற காவலர் தற்போது கணியம்பாடியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை முதல் முதல்வர் வருகைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவிட்டு வீட்டுக்கு சென்ற சில மணி நேரத்தில் காவலர் இம்ரான் தன்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கணியம்பாடி காவல் துறையினர் இம்ரானின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.