ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 

ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

விழுப்புரம் அடுத்த காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் ஏழுமலை என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் அண்மை காலமாக போலீசார் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பணி அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக காவலர்கள் பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

விழுப்புரம் அடுத்த காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் 2 ஆம் நிலை காவலராக உள்ளவர் ஏழுமலை. இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.