சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் பகீர் வாக்குமூலம் – கோர்ட்டில் சமர்பித்தது காவல் துறை!

 

சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் பகீர் வாக்குமூலம் – கோர்ட்டில் சமர்பித்தது காவல் துறை!

சுசீல்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஆசிரியை தீபா வெங்கடராமன், நிர்வாகி ஜானகி சினிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பக்தையுமானா பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் பகீர் வாக்குமூலம் – கோர்ட்டில் சமர்பித்தது காவல் துறை!

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாக புகாருக்கு உள்ளனவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சிவசங்கர் பாபாவால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் பகீர் வாக்குமூலம் – கோர்ட்டில் சமர்பித்தது காவல் துறை!

மேலும், இந்த விவகாரத்தில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை தொடர்பாக தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யுள்ளதாகவும், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மூன்று வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் ஜூலை 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.