தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு!

 

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு, அவர்கள் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு!

இந்த நிலையில் சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று காணொளி மூலம் நடைபெற உள்ளது.