மதுரையில் கொரோனாவுக்கு எஸ்ஐ ஒருவர் உயிரிழப்பு!

 

மதுரையில் கொரோனாவுக்கு எஸ்ஐ ஒருவர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,979 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் கொரோனாவுக்கு எஸ்ஐ ஒருவர் உயிரிழப்பு!

நேற்று மட்டும் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,481 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 85,859 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனாவுக்கு எஸ்ஐ ஒருவர் உயிரிழப்பு!

இந்நிலையில் மதுரையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு எஸ். ஐ ஒருவர் உயிரிழந்துள்ளார். உசிலம்பட்டி அருகே செக்கானூரணி காவல் நிலைய எஸ். ஐ பாண்டி கொரோனாவால் உயிரிழந்தார். கோவிலான்குளத்தை சேர்ந்த பாண்டி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.