நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல்!

 

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் நடிகை ரம்யாகிருஷ்ணனின் காரில் மது பாட்டில்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் கானத்தூர் காவல்துறையினர் வாகனச் சோதனை செய்துக் கொண்டிருந்ததனர். அப்போது அந்தவழையாக வந்த TN07CQ0099 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா சொகுசு காரை மறித்து, அதில் இருந்தவர்களிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர். காரில் அபிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி அபிநய கிருஷ்ணன் ஆகியோர் சோதனையிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், பிளாக் லேபிள் ரெட் 750 எம்.எல் 3 பாட்டில், பிளாக் லேபிள் பிளாக் 750 எம்.எல் 3 பாட்டில், மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன.

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல்!

இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி அபிநயகிருஷ்ணனும் ஜாமீனில் அழைத்துச் சென்றனர்.