தற்கொலை செய்யக் கிளம்பிய கணவன்… சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய மனைவி!

 

தற்கொலை செய்யக் கிளம்பிய கணவன்… சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய மனைவி!

ஒரு நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து பேசியது அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. மனைவி காவல்துறையினரை எச்சரித்ததால் அந்த நபரின் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

ரயில் குதித்து தற்கொலை செய்ய காத்திருந்த அந்த நபர் ரயில் தடத்திலிருந்து தனது மனைவிக்கு வீடியோ கால் செய்துள்ளார். இதையடுத்து அவரின் மனைவி அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உடனடியாக சம்பவ இடதிற்கு விரைந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

தற்கொலை செய்யக் கிளம்பிய கணவன்… சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய மனைவி!

மெடிக்கல் ரெப் ஆக வேலை செய்து வரும் அந்த நபர், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை குறித்த தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவரின் மொபைல் சிக்னலை வைத்து அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அந்த இடதிற்கு ஒரு காவலர்அனுப்பி வைக்கப்பட்டார். தற்கொலை செய்ய தயாராக இருந்தவரை காவலர் காப்பாற்றியுள்ளார். ஊரடங்கு காலம் பலரை தற்கொலை முடிவுக்கு தூண்டி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.