ரகசியமாக செயல்பட்ட பார் -பதுங்கு குழியிலிருந்த பெண்கள் – ரெய்டில் சிக்கிய ரகசியம்

 

ரகசியமாக செயல்பட்ட பார் -பதுங்கு குழியிலிருந்த பெண்கள் – ரெய்டில் சிக்கிய ரகசியம்

ஊரடங்கு நேரத்தில் ரகசியமாக செயல்பட்ட ஒரு பாரிலிருந்து பல பெண்களை போலீசார் மீட்டனர் .

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .இதனால் அங்கு அனைத்து பார்கள் ,மற்றும் ரெஸ்டாரெண்டுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது .ஆனால் சில பார்கள் வெளியே மூடப்பட்டு ,உள்ளே பல வாடிக்கையாளர்களை ரகசியமாக வரவைத்து அவர்களை உள்ளே குடிக்க வைத்துள்ளது

ரகசியமாக செயல்பட்ட பார் -பதுங்கு குழியிலிருந்த பெண்கள் – ரெய்டில் சிக்கிய ரகசியம்

இதனால் போலீசார் தானே மாவட்டத்தின் காஷிமிரா பகுதியில் ஒரு ஆர்கெஸ்ட்ரா பாரில்    சோதனை நடத்தியதில் 19 பேர் கைது செய்யப்பட்டனர் .அப்போது அங்கு அந்த பாருக்குள்  பதுங்கு குழி வெட்டப்பட்டு அதனுள் பல பெண்களை அடைத்து வைத்திருந்தனர் .அதை போலீசார் நடத்திய ரெய்டில் கண்டுபிடித்து அதிச்சியடைந்தனர் .பின்னர் அந்த பாரிலிருந்து ,அழுக்கான நிலையில்  மிகவும் மோசமான உடையுடன் இருந்த அந்த பெண்களை மீட்டனர் .அந்த பெண்கள் இன்னும் சில நாட்கள் அப்படி இருந்தால் இறக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறினர்

மேலும் உள்ளே இருந்த அந்த பாரினை நடத்திய 19 பேரை   போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர் .இது போல அங்கு ரகசியமாக பல பார்கள் நடைபெறுவதை கண்காணித்து  அவர்கள் தீவிர நடவடிக்கைஎடுக்க உள்ளதாக போலீசார் கூறினர் .”பதுங்கு குழியில் பெண்கள் அடைக்கப்பட்டு இருந்த தால் ஐபிசியின் பிரிவு 308 உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்று போலீஸ்  ரெய்டுக்கு சென்ற ஒரு அதிகாரி தெரிவித்தார்.