“அடை மழையிலும் அயராது உழைக்கும் காவலர்” – நெகிழவைக்கும் வைரல் வீடியோ!

 

“அடை மழையிலும் அயராது உழைக்கும் காவலர்” – நெகிழவைக்கும் வைரல் வீடியோ!

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் கனமழையிலும் தனது பணியை செய்யும் போக்குவரத்து காவலர் முத்துராஜா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில், 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னையில் கனமழை தொடரும் என்றும் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதன் படி சென்னை, செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

“அடை மழையிலும் அயராது உழைக்கும் காவலர்” – நெகிழவைக்கும் வைரல் வீடியோ!

இந்த நிலையில் அடை மழையிலும் போக்குவரத்து காவலர் முத்துராஜா அயராது உழைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தூத்துக்குடியில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர் முத்துராஜா, கனமழையில் வாகனங்கள் செல்வதை கண்காணித்து வழி நடத்துகிறார். இதனை பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ வைரலாகிய நிலையில், முத்துராஜின் அயராத பணி அம்மாவட்ட காவல்துறையின் கவனத்துக்கு எட்டியுள்ளது. அதனை பாராட்டும் விதமாக நிகழ்விடத்திலேயே முத்துராஜூக்கு காவல்துறை அதிகாரி பரிசு வழங்கியுள்ளார். காவலர் முத்துராஜுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.