சாத்தான்குள விவகாரம்: தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

 

சாத்தான்குள விவகாரம்: தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குள விவகாரம்: தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

 

அதனைத்தொடர்ந்து சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் சிபிஐ வழக்கு விசாரணையை கையில் எடுத்த நிலையில், முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்ட 3 காவலர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதனிடையே முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கும் ஜூலை 31 ஆம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்ட நிலையில், காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். சிபிஐ தரப்பு வாதங்களை கேட்ட பின் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.