ஆயுதப்படை காவலர் சரமாரியாக வெட்டிக் கொலை: செங்கல்பட்டு அருகே பரபரப்பு!

 

ஆயுதப்படை காவலர் சரமாரியாக வெட்டிக் கொலை: செங்கல்பட்டு அருகே பரபரப்பு!

செங்கல்பட்டு அருகே ஆயுதப்படை காவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் இன்பரசு. இவர் செங்கல்பட்டை சேர்ந்தவர். இன்று காலை வழக்கம் போல, இன்பரசு தனது பைக்கில் புழலை நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், இன்பரசை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அவ்வழியே சென்ற நபர்கள், இன்பரசு சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆயுதப்படை காவலர் சரமாரியாக வெட்டிக் கொலை: செங்கல்பட்டு அருகே பரபரப்பு!

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காவலர் இன்பரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த போலீசார் இன்பரசு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்பத் தகராறால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணையை கையிலெடுத்துள்ளனர். மேலும், காவலரை கொன்ற மர்ம நபர்களை அடையாளம் காண அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறதா என்றும் சோதனை செய்து வருகின்றனர். வேலைக்கு சென்ற காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.