கந்த சஷ்டி கவசம் அவதூறு வீடியோவை வெளியிட சொன்னது யார்? செந்தில்வாசனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

 

கந்த சஷ்டி கவசம் அவதூறு வீடியோவை வெளியிட சொன்னது யார்? செந்தில்வாசனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டதால் அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

கந்த சஷ்டி கவசம் அவதூறு வீடியோவை வெளியிட சொன்னது யார்? செந்தில்வாசனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை

இதனால் கறுப்பர் கூட்டம் இணையதள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து செந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கேட்ட நிலையில், 4 நாட்கள் விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில்வாசனிடம் போலீசார், கந்த சஷ்டி வீடியோ போட சொன்னது யார்? ஸ்பான்சர் கொடுத்தது யார்? சேனலுக்கு நிதி கொடுப்பது யார்? எதனடிப்படையில் இந்த தலைப்பு தேர்வு செய்யப்பட்டது என கிடுக்குப்பிடி விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வங்கி பண பரிமாற்றம் குறித்தும் செந்தில்வாசனிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.