பொதுத்துறை வங்கி ஏடிஎம்மின் கண்ணாடி உடைப்பு – போலீசார் விசாரணை

 

பொதுத்துறை வங்கி ஏடிஎம்மின் கண்ணாடி உடைப்பு – போலீசார் விசாரணை

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் – நத்தம் சாலை கோபால்பட்டி பகுதியில் கனரா வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு வந்த மர்மநபர்கள் சிலர், கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடினர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் வங்கி அதிகாரிகளுக்கும், சாணார்பட்டி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் ஏடிஎம்மை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

பொதுத்துறை வங்கி ஏடிஎம்மின் கண்ணாடி உடைப்பு – போலீசார் விசாரணை

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏடிஎம்மில் பணம் திருடுவதற்காக கண்ணாடி உடைக்கப்பட்டதா? அல்லது குடிபோதையில் யாரேனும் உடைத்தனரா? என விசாரித்து வருகின்றனர். இதனிடையே அதேபகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.