வீடியோவை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த போலீஸ் – கங்கையில் குதித்த இளம்பெண்

 

வீடியோவை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த போலீஸ் – கங்கையில் குதித்த இளம்பெண்

இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மயங்கியதும் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக்கொண்டு அதை காட்டி காட்டி மிரட்டி இரண்டு வருடமாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அவரின் தொல்லை தாங்காமல் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருக்கிறார். உத்திரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

வீடியோவை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த போலீஸ் – கங்கையில் குதித்த இளம்பெண்

அம்மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார் இளம்பெண்ணின் மாமா. கடந்த 2019ஆம் ஆண்டு கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு அழைத்து இருக்கிறார் அந்த போலீஸ் கான்ஸ்டபிள். குடும்பத்தினர் அனைவரும் கும்பமேளாவை பார்க்க சென்ற போது இளம் பெண்ணை மட்டும் நைசாக வேறு ஒரு காரணம் சொல்லி விடுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அதை குடித்த அந்த இளம்பெண் மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். மயக்கம் தெளிந்து அந்த வீடியோவை காட்டி மிரட்டியிருக்கிறார். இதனால் அங்கு நடந்ததை இளம்பெண் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர், இளம் பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். ஆத்திரப்பட்டு எதிர்த்தால் அந்த வீடியோவை காட்டி மிரட்டி இருக்கிறார். இரண்டு வருடமாக இப்படி அந்த பெண்ணை சித்திரவதை செய்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் கங்கை நதியில் வைத்திருக்கிறார்.

இதை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு போலீசார் அப்பெண்ணை மீட்டு கரை ஏற்றியிருக்கிறார்கள். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சொந்த மாமாவே இந்த நிலைமைக்கு காரணம் என்பதை கூறியிருக்கிறார். இதையடுத்து அவரின் மாமா போலீஸ் கான்ஸ்டபிள் வரவழைக்கப்பட்டு அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.