உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில், காவல் ஆய்வாளர் பலி!

 

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில், காவல் ஆய்வாளர் பலி!

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). இவர் சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றிருந்த ராமகிருஷ்ணன், நேற்று காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில், காவல் ஆய்வாளர் பலி!

நேற்று பிற்பகல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இறஞ்சி என்ற இடத்தின் அருகே சென்றபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோலைர தடுப்பின் மோதி விபத்திற்குள்ளனது. இதில், ராமகிருஷ்ணன் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்த எடைக்கல் காவல் நிலைய போலீசார் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.