நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்: விசாரணையில் வெளியான உண்மை!

 

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்: விசாரணையில் வெளியான உண்மை!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 108 அவசர தொலைபேசி அழைப்புக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார் .

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்: விசாரணையில் வெளியான உண்மை!

இதனால் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்ற போலீசார் வீட்டை சோதனை இட்டது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த தேனாம்பேட்டை போலீசார் மிரட்டல் விடுத்த நபர் யார் என தேடிவந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்: விசாரணையில் வெளியான உண்மை!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் என தகவல் வெளியாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் 108 அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோரை அழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.