“அண்ணா சிலை பீடத்தில் காவித்துண்டு போட்டவர் மனநலம் குன்றியவர்” .. காவல்துறை விளக்கம்

 

“அண்ணா சிலை பீடத்தில் காவித்துண்டு போட்டவர் மனநலம் குன்றியவர்” .. காவல்துறை விளக்கம்

கலவரத்தை தூண்டும் விதமாக சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றினர். இதேபோல் ஈரோட்டிலும் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதுபோன்று தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது கவித்துண்டு அணிவித்த சம்பவமும் நடந்தது.

“அண்ணா சிலை பீடத்தில் காவித்துண்டு போட்டவர் மனநலம் குன்றியவர்” .. காவல்துறை விளக்கம்

இவ்வாறு மறைந்த தலைவர்களை அவமதிப்பு செய்வது தொடர்ந்து வரும் நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இருக்கும் அண்ணா சிலை மீது பழைய பல்பு, மாலை, காவிக் கொடி அணிவித்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. அண்ணா சிலை மீதான அவமதிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குழித்துறை சந்திப்பில் இருக்கும் அண்ணா சிலை பீடத்தில் காவித்துண்டு போட்டவர் மனநலம் குன்றியவர் என்றும் எந்த உள்நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.