‘வெடிகுண்டு வீசி தலைமைக் காவலர் கொலை’ ரவுடியை பிடிக்க போனதால் நேர்ந்த சோகம்!

 

‘வெடிகுண்டு வீசி தலைமைக் காவலர் கொலை’ ரவுடியை பிடிக்க போனதால் நேர்ந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய துரைமுத்து என்ற ரௌடி சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, தலைமை காவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது காவலர்களுக்கும் ரவுடிக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றதால், நாட்டு வெடிகுண்டை ரவுடி வீசியுள்ளார். இரண்டாவது முறையாக வெடிகுண்டு வீசப்பட்ட போது, அது காவலர் சுப்பிரமணியனின் தலையில் விழுந்து வெடித்துள்ளது.

‘வெடிகுண்டு வீசி தலைமைக் காவலர் கொலை’ ரவுடியை பிடிக்க போனதால் நேர்ந்த சோகம்!

அதனால் படுகாயம் அடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் குறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணைக்கு பிறகே சம்பவம் குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.