கொரோனாவுக்கு 28 வயதான காவலர் பலி!

 

கொரோனாவுக்கு 28 வயதான காவலர் பலி!

கொரோனா பெருந்தொற்றுக்கு 28 வயதான காவலர் உயிரிழந்திருப்பது காவல் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு 28 வயதான காவலர் பலி!

அயனாவரம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். 28 வயதான இவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலசுப்ரமணியனுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக செயற்கை சுவாச கருவி உடன் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.