கணவனின் குடும்பத்தை மனைவி சுட்டுக் கொன்ற வழக்கு: குற்றவாளிகளுக்கு போலீஸ் காவல்!

 

கணவனின் குடும்பத்தை மனைவி சுட்டுக் கொன்ற வழக்கு: குற்றவாளிகளுக்கு போலீஸ் காவல்!

சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த தலித்சந்த், அவரது மகன் ஷீத்தல் மற்றும் மனைவி புஷ்பா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஷீத்தலை பிரிந்து வாழும் அவரது மனைவி ஜெபமாலா ஜீவனாம்சம் தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் 3 பேரையும் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

கணவனின் குடும்பத்தை மனைவி சுட்டுக் கொன்ற வழக்கு: குற்றவாளிகளுக்கு போலீஸ் காவல்!

இதையடுத்து, சென்னையில் இருந்து புனே தப்பிச் செல்ல முயன்ற ஜெபமாலாவையும் அவரது சகோதரர்கள் 2 பேரையும் தமிழக போலீசார் சேஸிங் செய்து மடக்கி பிடித்தனர். அவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தரப்பில் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கணவனின் குடும்பத்தை மனைவி சுட்டுக் கொன்ற வழக்கு: குற்றவாளிகளுக்கு போலீஸ் காவல்!

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகள் 3 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளனர். விசாரணையின் முடிவில், இந்த கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.