குழந்தை இல்லாத ஏக்கம் : போலீஸ் தம்பதி தற்கொலை!

 

குழந்தை இல்லாத ஏக்கம் : போலீஸ் தம்பதி தற்கொலை!

குழந்தை இல்லாத காரணத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இல்லாத ஏக்கம் : போலீஸ் தம்பதி தற்கொலை!

பெங்களூரு கொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள சம்பிகேஹள்ளி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரது மனைவி ஷீலா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சை மேற்கொண்டும் பலனில்லை. இதனால் இந்த தம்பதி விரக்தியில் இருந்து வந்துள்ளனர்.

குழந்தை இல்லாத ஏக்கம் : போலீஸ் தம்பதி தற்கொலை!

இந்நிலையில் நேற்று காலை சுரேஷ் வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது இந்த தம்பதி தூக்கில் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்பு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.