ஆயுதப்படை காவலர் நாகராஜன் கொரோனாவுக்கு பலி : காவல்துறையில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
Jul 6, 2020, 12:37 IST1594019276000
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நாகராஜன். சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவர் சென்னை பாரிமுனையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து காவலர் நாகராஜன் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் ஆயுதப்படை பிரிவில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
முன்னதாக சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.