பணியில் இருந்த காவலர் திடீர் உயிரிழப்பு!

 

பணியில் இருந்த காவலர் திடீர் உயிரிழப்பு!

சேலம் ஆயுதப்படையில் வாகன பிரிவு தலைமை ஓட்டுனராக சுந்தர் (46) என்ற காவலர் பணியாற்றி வந்தார். நேற்று மாலை சேலம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .

பணியில் இருந்த காவலர் திடீர் உயிரிழப்பு!

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுந்தர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுப்பத்திருந்த காவலர் சுந்தருக்கு வலிப்பு ஏற்பட்டு அவர் வீட்டுக்கு சக காவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் மீண்டும் மாலை பணிக்கு திரும்பிய நிலையில் தான் மாரடைப்பால் உயரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.