தருமபுரி அருகே காவலர் கொரோனாவுக்கு பலி!

 

தருமபுரி அருகே காவலர் கொரோனாவுக்கு பலி!

தருமபுரி

தருமபுரி அருகே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2ஆம் நிலை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட யைபர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாதன். இவரது மகன் விஜயகுமார் (38). இவர் அரூர் அருகேயுள்ள அ.அள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் 2ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

தருமபுரி அருகே காவலர் கொரோனாவுக்கு பலி!

இந்த நிலையில், கடந்த வாரம் விஜயகுமாருக்கு திடீரென சளி, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த காவலர் விஜயகுமார், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவுக்கு காவலர் பலியான சம்பவம் கிராம மக்கள் மற்றும் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.