காவல்துறை புகார் ஆணையம் கோரி ம.நீ.ம வழக்கு! – தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் காவல் துறை மீதான புகார்களை விசாரிக்க காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாததை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் போலீசார் மீது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.— Kamal Haasan (@ikamalhaasan) July 3, 2020
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும் முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியுமான மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர்.