“காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை” பணிச்சுமையால் காவலர் தற்கொலை

 

“காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை” பணிச்சுமையால் காவலர் தற்கொலை

திண்டிவனம் சப் ஜெயில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லியக்கோடன் நகரை சேர்ந்த பாரதி மணிகண்டன், திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராக பணியாற்றிவருகிறார். நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இவர் நின்றுக்கொண்டே பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த மணிகண்டன் பிளேடால் கையை கிழித்து கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த உடனிருந்த காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

“காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை” பணிச்சுமையால் காவலர் தற்கொலை

சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துக்கொண்ட மணிகண்டன் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நின்று கொண்டே பணி செய்ய சப் ஜெயிலர் உத்தரவிட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலம் அளித்தார். காவலர் வேலை மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.