சென்னையில் ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை!

 

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை!

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை!

கடலூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ். இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பெரியமேடு போலீசார் காவலர் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுரேஷ், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் போலீசார் அவரது உறவினர்கள் மத்தியிலும் அவரது தற்கொலைக்கான காரணத்தை விசாரித்தது வருகின்றனர்.

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் விஷம் குடித்து தற்கொலை!

முன்னதாக ஆயுதப்படை காவலர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பனி சுமையும் இருந்துள்ளது. இதனால் பணிச்சுமை காரணமாக சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.