மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உடை மாற்றி விட்ட போலீசார்: குவியும் பாராட்டு!

 

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு  உடை மாற்றி விட்ட போலீசார்: குவியும் பாராட்டு!

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு காவலர்கள் புத்தாடை அணிவித்து விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு  உடை மாற்றி விட்ட போலீசார்: குவியும் பாராட்டு!

காவலர்கள் என்றாலே கண்டிப்பானவர்கள் என்ற பிம்பத்தை உடைக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் என்ற இரண்டு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது மன்னார்குடி பேருந்து அருகே அவர்கள் வந்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் முறையான உடையின்றி கந்தல் துணி ஒன்றை மட்டுமே அணிந்து படுத்துக்கொண்டு இருந்துள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு  உடை மாற்றி விட்ட போலீசார்: குவியும் பாராட்டு!

இதை கண்ட காவலர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு புத்தாடைகள் வாங்கி கொண்டு வந்து அவருக்கு அணிவித்து அழகு பார்த்தனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதை கண்ட பொதுமக்கள் மட்டுமின்றி மாவட்ட கண்காணிப்பாளர் துரை, காவலர்கள் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.