ரெண்டாயிரம் வாங்குவார் -இருநூறுதான் கொடுப்பார் -பார்ட் டைமில் பலான தொழில் நடத்திய அரசு ஊழியர்.

 

ரெண்டாயிரம் வாங்குவார் -இருநூறுதான் கொடுப்பார் -பார்ட் டைமில் பலான தொழில் நடத்திய அரசு ஊழியர்.

ஒரு லாட்ஜில் போலீசார் ரெய்டு நடத்தியதில் அங்கு பலான தொழில் நடத்திய பெண்கள் உள்பட எட்டு பேரை கைது செய்தனர்.

ரெண்டாயிரம் வாங்குவார் -இருநூறுதான் கொடுப்பார் -பார்ட் டைமில் பலான தொழில் நடத்திய அரசு ஊழியர்.

ஹைதராபாத்தில் எல்.பி.நகரில் உள்ள ஐ.என் ஆர்.சி.டி காலனியில் இருக்கும் சாராய் துர்கா லாட்ஜ்ஜில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த லாட்ஜில் கடந்த வாரம் ரெய்டு நடத்தினார்கள் .அப்போது அங்கு பங்களாதேஷில் இருந்து வந்த நான்கு பாலியல் தொழிலாளர்களை மீட்டனர் .அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களின் கண்ணீர் கதையை கேட்டனர் .அப்போது அவர்கள் தங்களை வங்கதேசத்திலிருந்து கடத்தி வந்ததாக கூறினார்கள் .மேலும் அந்த தொழிலின் தலைவராக செயல்படுவது அங்குள்ள பஞ்சாயத்து துறையில் ஜூனியர் உதவியாளராக பணிபுரியும் 32 வயதான அவினாஷ் என்று கூறினர் .மேலும் அவர் வாடிக்கையாளர்களை கவர தங்களின் போட்டோக்களை வாட்ஸ் அப்பில் விடுவாராம் .அதன் பிறகு அவர்களிடம் 2000 ரூபாய் வாங்கிவிட்டு தங்களுக்கு 200 ,ரூபாய்தான்  கொடுப்பார் என்றனர் .அவர்கள் கொடுத்த துப்பின்படி போலீசார் செயல்பட்டு எட்டு பேரை கைது செய்தார்கள் 

இதில் அரசு ஊழியர்  எம் அவினாஷ்லாட்ஜ் உரிமையாளர் டி வெங்கடேஷ்வதர் ராவ் (52), சர்காமனைச் சேர்ந்த சகிஜன் கதுன் (30), மீர்பேட்டைச் சேர்ந்த ஜி சுஜாதா (27), மீர்பேட்டைச் சேர்ந்தவர், சி மனீஷ் (25), கே பஞ்சரம் (38),  மது (30) மற்றும் விகாஸ் குமார் சங்கேத் (22). ஆகியோர் ஆவார்கள் .போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

ரெண்டாயிரம் வாங்குவார் -இருநூறுதான் கொடுப்பார் -பார்ட் டைமில் பலான தொழில் நடத்திய அரசு ஊழியர்.