சிறுவனை லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸ் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

 

சிறுவனை லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸ் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகரை சேர்ந்த யுவன் என்ற 13 வயது சிறுவன் கடந்த 23 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக நண்பர் வீட்டுக்கு சென்று உள்ளார்.

சிறுவனை லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸ் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர் துர்கா ராஜ் முழு ஊரடங்கு காலத்தில் வெளியில் வரக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு பதிலாக தனது லத்தியால் சிறுவனை சரமாரியாக அடித்து உள்ளார். இதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 13 வயது சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் துர்கா ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சிறுவனை லத்தியால் கொடூரமாக தாக்கிய போலீஸ் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இந்நிலையில் 13 வயது சிறுவனை லத்தியால் தாக்கிய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமைக் காவலர் துர்கா ராஜ் தொடர்பாக கோவை காவல் ஆணையர் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.