“ஏண்டி எப்பவும் பொம்பள புள்ளையா பெத்து கொடுக்கிறே?”-குடும்பத்தினரோடு சேர்ந்து மனைவியை வீட்டை விட்டு விரட்டிய கணவன் ..

 

“ஏண்டி எப்பவும் பொம்பள புள்ளையா பெத்து கொடுக்கிறே?”-குடும்பத்தினரோடு சேர்ந்து மனைவியை வீட்டை விட்டு விரட்டிய கணவன் ..

எத்தனையோ குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் பெற்றோரை ,முதியோர் இல்லத்தில் சேர்த்தாலும் ,இன்னும் சமுதாயத்தில் ஆண் குழந்தை மோகம் குறையவில்லை என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் .

“ஏண்டி எப்பவும் பொம்பள புள்ளையா பெத்து கொடுக்கிறே?”-குடும்பத்தினரோடு சேர்ந்து மனைவியை வீட்டை விட்டு விரட்டிய கணவன் ..
மகாராஷ்டிரா மாநிலம் அம்போலியின் புறநகர் பகுதியில் 2007ம் ஆண்டு திருமணமான ஒரு ஹோட்டல் கடை தம்பதியருக்கு தொடர்ந்து நான்கு பெண் குழந்தைகளாக பிறந்தது .இதனால் அவர்கள் ஆண் குழந்தை வேண்டினர் .இதனால் ஒவ்வொரு முறையும் மனைவி பிரசவத்துக்கு செல்லும்போதெல்லாம் ஆசையாக ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பார்கள் .ஆனால் தொடர்ந்து பெண் குழந்தையாகவே அவர் மனைவி பெற்றதால் அந்த கணவனும் அவரின் குடும்பத்தினரும் மனம் வெறுத்தனர் .மேலும் சில உறவினர்கள் அந்த கணவனிடம் உன் மனைவியை விரட்டி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் உனக்கு ஆண் குழந்தை பிறக்குமென்று குடும்பத்தில் கலகம் செய்தார்கள் .

 

இதனால் அந்த கணவன் நான்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த அந்த பெண்ணை வீட்டை விட்டு விரட்டியுள்ளார் .மேலும் அந்த நாலு பெண் குழந்தைகளை தானே வைத்துக்கொண்டார் .இதனால் 13 ஆண்டுகாலம் கணவனோடும் .குழந்தைகளோடும் வாழந்து வந்த அந்த பெண் எங்கு போவது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் .இப்படி இந்த வயதில் அனாதையாகிவிட்டோமே என்று அழுதார். .பிறகு நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்று தன்னுடைய கணவன் மீதும் ,அவரின் குடும்பத்தினர் ஆறு பேர் மீது புகார் கொடுத்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சமாதானம் செய்து அந்த பெண்ணை கணவனோடு வாழ வழி செய்கிறார்கள் .

“ஏண்டி எப்பவும் பொம்பள புள்ளையா பெத்து கொடுக்கிறே?”-குடும்பத்தினரோடு சேர்ந்து மனைவியை வீட்டை விட்டு விரட்டிய கணவன் ..

 

.