தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய மீரா மிதுனுக்கு போலீஸ் அட்வைஸ்!

 

தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய மீரா மிதுனுக்கு போலீஸ் அட்வைஸ்!

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்ட நடிகை மீரா மிதுனுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கியுள்ளது.

தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய மீரா மிதுனுக்கு போலீஸ் அட்வைஸ்!

அஜித் ரவி என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் அவரது தொல்லைகளை தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் நடிகை மீரா மிதுன் நேற்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக முதல்வர் மற்றும் பிரதமருக்கு டேக் செய்து ட்வீட் செய்திருந்த மீரா மிதுன் அதில், அஜித் ரவி என்பவரின் அமைப்பு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் இணைந்து பணி செய்தோம், அவரது அமைப்பிலிருந்து விலகிய பின்னரும் தன்னை பின்தொடர்ந்து வந்து, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தொல்லை செய்து வருகிறார். தான் தற்கொலை செய்து கொண்ட பிறகாவது நடிகர் சுஷாந்த் சிங் வழக்கை போன்று குற்றவாளியான அஜித் ரவிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய மீரா மிதுனுக்கு போலீஸ் அட்வைஸ்!

இதற்கு பதிலளித்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, மீராமிதுனிடம் மின்னஞ்சல் வழியாக புகாரளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான பதிவை மீரா மிதுன் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.